2.4 மீட்சி |
செவிலித்தாய் தலைவியைத் தேடிச்
சென்று காணாமல் திரும்பி
வருதல் மீட்சி எனப்படும். உடன்போக்காகச் சென்ற
தலைவனும்
தலைவியும் மீண்டு வருதலையும் மீட்சி என்று குறிப்பிடுவர்.
இவ்விரு
நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக அமையும்
மீட்சி என்பது நான்கு
வகைகளை உடையது. |
தெளித்தல்
|
உடன்
போக்காகச் சென்ற தலைவியைத் தேடிக் காணாமல்
திரும்பி
வந்த செவிலித்தாய் நற்றாயிடம் ‘தலைவி நெடுந்தூரம்
சென்று விட்டாள்’
என்று கூறி அவளைத் தெளிவித்தல் தெளித்தல்
எனப்படும். அவ்வாறே
தலைவன் மீண்டு வரும்போது தலைவியினது ஊர் நெருங்கிவிட்டதனைக்
கூறுதலும், தெளித்தல் ஆகும். |
மகிழ்ச்சி
|
தலைவி
தலைவனுடன் திரும்பி வருவதை, அவளுக்கு
முன்னே
செல்லும்
சிலர் தோழியிடம் சென்று கூறுவர்.
அது கேட்டு, தோழி
மகிழ்வாள்
; உடனே தோழி சென்று நற்றாயிடம் கூறுவாள். அவளும்
அதைக் கேட்டு மகிழ்வாள். இவ்விரண்டும்
மகிழ்ச்சி
என்னும் வகையின்
விளக்கங்கள் ஆகும். |
வினாதல்
|
தலைவி
மீண்டு வருவதை அறிந்த நற்றாய் தன் மகளைத் தலைவன்
நம் மனைக்குக் கொண்டு வருவானா அல்லது தன்
நகர்க்கே
கொண்டு செல்வானா என்று, வெறியாட்டு
நிகழ்த்தும் வேலனிடம்
கேட்பது வினாதல் எனப்படும். |
செப்பல்
|
தலைவியின்
வருகையை அவளுக்கு முன் சென்றோர் தோழியிடம்
கூறுதல்
செப்பல் எனப்படும். |
2.4.1 மீட்சியின் விரிவு
|
மேலே
நான்கு வகைப்பட்டதாக உரைக்கப்பட்ட மீட்சி என்பது
ஆறு
வகைப்பட்ட விரிவுக் கிளவிகளைக் கொண்டதாகும். அவையாவன : |
(1) தலைவி நெடுந்தூரம் சென்றதைச் செவிலி நற்றாயிடம் கூறுதல். |
(2) திரும்பி வரும்போது
தலைவன் தாம் தலைவியின்
ஊரை
நெருங்கி விட்டதைத்
தலைவிக்கு கூறுதல். |
(3)
தனது வருகையைத் தோழிக்கு
அறிவிக்குமாறு தனக்கு முன்
செல்கின்றவரிடம்
தலைவி கூறுதல். |
(4) முன்
சென்றோர் தோழிக்குத் தலைவியின்
வருகையைத்
தெரிவித்தல். |
(5) தலைவியின்
வருகையைத் தெரிந்துகொண்ட தோழி அதனை
நற்றாய்க்குக்
கூறுதல். |
(6) தலைவியின்
வருகையை உணர்ந்த நற்றாய் வேலனைப் பார்த்துத்
தலைவன் தன் மகளுடன் இங்கு
வருவானோ தன் நகர்க்கே
செல்வானோ என்று
வினவுதல். |
இவை யாவும் மீட்சியின் விரிவுக் கிளவிகளாக அமைகின்றன. |
ஒரு
வகையில்
மீட்சியின் நான்கு வகைகளுக்கான
விளக்க
வுரைகளாகவும்
இவற்றைக் கொள்ளலாம். |