தன் மதிப்பீடு - I : விடைகள்

4.

இறைச்சிப் பொருளை ஒரு சான்றுடன் விவரிக்க.

அரும்பெறல் அமிழ்தம் ஆர்பத மாகப்
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
தம்இல் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழம் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை வரும்என்றோளே.
             (குறுந்தொகை,83)

விளக்கம்:

இப்பாட்டில் தோழி கூறும் வெளிப்படையான கருத்து:

இனிமை தரும் களைகளை உள்ளே கொண்டிருந்தும்,
வெளியே இன்னாத முட்களையுடையனவாய்க் காணப்படும்
பலாக் கனிகளை உடைய நாட்டின் தலைவன் வருவான்
என்று செவிலி கூறினாள் என்பது.

தோழி உணர்த்த விரும்பும் கருத்து:

உள்ளத்தில், வரைந்து (மணந்து) கொண்டு இல்லறத்தொழுகி
இன்பம் அடையும் எண்ணம் இருந்தும், புறத்தே இன்னல்
தரும் களவிலே காதலுடையான்போல் காணப்பட்டான்
தலைவன் என்பது, தோழிகூற்றின் புறத்தே பிறிதொரு
பொருள் தோன்றினமையான் இப்பாடலில் இறைச்சி என்னும்
பொருள் அமைப்பு உள்ளது.

முன்