தன்மை அணி 'பொருள், குணம், இனம், தொழில்'
என்னும்நான்கின் அடிப்படையில் தோன்றும் எனவே தன்மையணிபொருள்
தன்மை, குணத் தன்மை, இனத் தன்மை,தொழில் தன்மை என நான்கு வகைப்படும்.
ஒருபொருளின் தன்மையைக் கூறுவது பொருள் தன்மை; ஒரு குணத்தின் தன்மையைக்
கூறுவது குணத்தன்மை. ஒருஇனமின் - இனத்தின் தன்மையைக் கூறுவது இனத் தன்மை;
ஒரு தொழிலின் தன்மையைக் கூறுவது தொழில் தன்மைஆகும். இவற்றுள் முதற்கண்
கூறப்படும் பொருள் தன்மைஅணியைச் சான்றுடன் விளக்கமாகக் காண்போம்.
ஒரு பொருளின் பல விதமான இயல்புகளைஉள்ளவாறு
எடுத்துக் கூறுவது பொருள் தன்மையாகும்.
எடுத்துக்காட்டு:
நீல மணிமிடற்றன்; நீண்ட சடைமுடியன்;
நூல்அணிந்த மார்பன்; நுதல்விழியன்; -
தோல்உடையன்;
கைம்மான் மறியன்; கனல்மழுவன்; கச்சாலை
எம்மான் இமையோர்க்கு இறை |
இப்பாடலின் பொருள்:
திருக்கச்சாலை என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும்
எம்பெருமானாகிய சிவபெருமான் கருங்குவளை மலர் போன்றஅழகிய கழுத்தை உடையவன்;
நீண்ட சடைமுடியைஉடையவன்; முப்புரி நூல் அணிந்த மார்பினை உடையவன்;நெற்றிக்கண்ணை
உடையவன்; புலித்தோல் ஆடைஅணிந்தவன்; கையிலே மான்
குட்டியையும் கனலையும்மழுவினையும் (கோடரியையும்) ஏந்தியவன்; அவன் தேவர்க்கும்இறைவன்
ஆவான்.
அணிப் பொருத்தம்:
இப்பாடலில் 'சிவபெருமான்' என்ற பொருளின்(உருவத்தின்)
பல விதமான தோற்ற இயல்புகளை நேரில்பார்ப்பது போல உள்ளவாறு கூறியிருப்பதால்
இப்பாடல்பொருள் தன்மை அணி ஆயிற்று. |