|
இசைப்பாட்டு, உரைநடைப் பேச்சு என்ற இரண்டு
வெளிப்பாட்டு முறைகள் நாடகத்துக்கு உண்டு.
மிகப்பழைய
புராண இதிகாச நாடகங்கள் எல்லாம்
இசைப்பாட்டு
நாடகங்களாகவே இருந்தன.
உரையாடல்கள் அனைத்தும்
பாடல்களாகவே இருக்கும்.
படிப்படியாக இசைப் பாடல்கள்
குறைந்து உரைநடைப்
பேச்சு நாடகத்தில் இடம் பெற்றது. நன்கு
பாடி நடிக்கத்
தெரிந்தவர்கள் மட்டுமன்றி, நன்கு பேசி நடிக்கத்
தெரிந்தவர்களும் நடிக்கலாம் என்ற நிலை உருவானது.
உரையாடல் நாடகம்
சம்பந்த முதலியார் தம் நாடகங்களில்
உரைநடையையே
கையாண்டார். ஒரு வரிகூடப் பாடத்
தெரியாத நடிகர்கள் கூட
அவரது நாடகத்தில் பேசியே
நடித்துப் பாராட்டுதல்களைப்
பெற்றிருக்கின்றனர்.
பாட்டு உரைநடையாக மாறியதும் உரைநடை
இன்னும்
சுருங்கி நடிப்பை வெளிப்படுத்துவதற்கு உதவும்
ஒரு துணைப்
பொருளாக மாறியதும் கூடக்
காலப்போக்கில் நாடக்கலை
வெளிப்பாட்டில் ஏற்பட்ட
வளர்ச்சிதான். இந்த மாறுதல்களை
முன்னின்று
நடத்தியவர்களுள் முதன்மையானவர் பம்மல்
சம்பந்த
முதலியார். |