| 1.2 மரபுக்கவிதைகள் | ||||||
மரபுக் கவிதை என்பது யாப்பு இலக்கணத்தோடு அமைந்தது. யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள். அதாவது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற இலக்கண உறுப்புக்களால் கட்டப்படுவது. பாட்டுக்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும். யாப்பு என்பது செய்யுள் எனவும் பொருள்படும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனச் செய்யுள் நான்கு வகைப்படும். |
||||||
| 1.2.1 அமைப்பும் போக்கும் | ||||||
| நமது தமிழ் இலக்கியத்தில் உள்ள சங்க இலக்கியப் பாடல்கள், பக்தி இலக்கியப் பாடல்கள் முதலிய அனைத்தும் மரபுக்கவிதையைச் சார்ந்தவை.
யாப்பைப் பார்ப்போம்.
எடுத்துக்காட்டு
நளன் தமயந்தி ஆகியோரின் கதையைக் கூறும் நளவெண்பா
|
||||||