6.0 பாட முன்னுரை

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசனின்
கவிதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்; பொதுவுடைமையை
விரும்பியவர்; ஏழைகளின் வாழ்க்கையைக் கவிதையாக்கியவர்;
இளமையிலிருந்தே சுயமரியாதையோடு வாழ்ந்தவர்; மக்களின்
நிலை உயர எழுதியதாலும், அவர்கள் படும்பாட்டையும்
பண்பாட்டையும் அவர்கள் புரிந்து கொள்ளும் முறையில்
எழுதியதாலும் ‘மக்கள் கவிஞர்’ என அழைக்கப்பட்டவர். பொது
மக்கள் புரிந்து கொள்ளும் படியாக எளிய பாடல்களைப் பாடித்
திரைப்படத் துறையில் சாதனை படைத்தவர்.