| 6.5 பட்டுக்கோட்டையார் பாடலில் இலக்கிய நயம் | |
சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர் சிந்திடும் மலரே ஆராரோ வண்ணத் தமிழ்ச் சோலையே! மாணிக்கமாலையே ஆரிரரோ... அன்பே... ஆராரோ... (கே.ஜீவபாரதி ( தொ.ஆ ), பட்டுக்கோட்டையார் பாடல்கள், ப.158) என்ற தாலாட்டுப் பாடல் எத்தனை இலக்கியத் தரம் வாய்ந்ததாக உள்ளது! உவமைக்குச் சிறந்த பாடல்களைப் பட்டுக்கோட்டையாரிடம் காணலாம். உழவனும் ஓயாத உழைப்பும்போல் நாமே ஒன்றுபட்டு வாழ்க்கையில் என்றுமிருப்போம் (பட்டுக்கோட்டையார் பாடல்கள் - ஒரு திறனாய்வு, பக்.135) இங்கே காதலைச் சொல்லுமிடத்தும் தம் தனிப்பட்ட சமூகக் கருத்தோட்டத்தை உவமையாகப் படைத்திருப்பது சிறப்பிற்குரியது. |
|