p10315 நாமக்கல் இராமலிங்கத்தின்
கவிதைகள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    பாட்டுக்கொரு புலவன் பாரதிக்குப் பின் தேசியம் பாடும்
கவிதை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் நாமக்கல்
கவிஞர். விடுதலை வேண்டிப் பாடியவர். காந்தியின் மீது
எல்லையற்ற அன்பும், மதிப்பும் கொண்டவர். அவரின் வாழ்க்கை,
கவிதை எழுதிய சூழல், பின்னணி ஆகியவற்றை இந்தப் பாடம்
விரிவாக எடுத்துக் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
பாரதியின் காலத்தில் எழுந்த தேசியப்பற்றும்,காந்தியப்பற்றும்
நாமக்கல் கவிஞரிடம் ஆழ வேரூன்றியுள்ளதை அறியலாம்.
காந்தியக் கொள்கையில் அவருக்கு ஏன் விருப்பம்
ஏற்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
நாட்டுப்பற்றைக் கவிதைகள் மூலம் பாடிய முறை பற்றி
அறிந்து மகிழலாம்.
சமூக ஏற்றத்தாழ்வுகளை அவர் எவ்வாறு வெறுத்தார்,
கண்டித்தார் என்பதைக் காணலாம்.
தமிழ், தமிழன் மீது நாமக்கல் கவிஞர் கொண்டிருந்த பற்றை
அறியலாம்.