|
காலத்தை வென்ற கவிஞர்; முறையாகக் கல்வி பயிலாதவர்;
மக்களைப் பாடியவர்; மக்களுக்காக, மக்கள் மொழியில்
எழுதியதால் மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர்; இத்தகைய
சிறப்புகளையுடைய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்
வாழ்வும், படைப்பும் பற்றிய தகவல்களைத் தருகிறது இப்பாடம்.
இத்தகவல்களின் மூலம் ஏழைகளின் நலிவையும், நாட்டுப்புற
மக்களின் பழக்க வழக்கங்களையும், கலை மரபுகளையும்,
மண்ணின் மணத்தையும், விவசாயத் தொழிலின் சிறப்பையும்
இப்பாடம் விளக்கிக் காட்டுகிறது.
|
|