| |
பாரதிதாசன் தமிழை அமுதத்தோடும், உயிரோடும்
ஒப்பிட்டுக் கூறுகின்றார். தமிழை நிலவென்றும், மணமென்றும்,
மதுவென்றும் சிறப்பிக்கின்றார். தமிழை இளமைக்கும்
புலவர்களின் புலமைக்கும் அசதியைப் போக்கும் தேனுக்கும்
ஒப்பிடுகிறார்.மொத்தத்தில் தமிழை மனித உயிரோடு உயிராகக்
கலந்த ஒன்று எனப் பாடுகின்றார். |