2) கவிமணியின் கவிதைகளில் கதைகூறல் மரபு எவ்வாறு
இடம் பெற்றுள்ளது?

     ஒரு செய்தியைக் கதைவடிவில் கூறினால் கேட்போர்
மனத்தில் அது என்றும் நிலைத்திருக்கும். இதுவே கதைகூறல்
மரபாகும். இந்த மரபின்படி“ தோட்டத்தில் மேயுது
வெள்ளைப்பசு” பாடலைப் பாடியிருக்கிறார் கவிஞர். இந்தப்
பாடலைத் தொடர்ந்து பல தலைமுறையினர் கதை கூறுவதைப்
போலப் பாடி மகிழ்ந்து வருகின்றனர்.