P10323 ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


     இந்தப் பாடம் ந. பிச்சமூர்த்தி என்னும் கவிஞரைப்
பற்றியது. தமிழில் புதுக்கவிதையின் முன்னோடியான
அவரைப் பற்றியும், அவரது கவிதைகள் பற்றியும்
எடுத்துரைக்கிறது. அவரது கவிதைகளின் சிறப்புகள் பற்றி
அறிந்து கொள்ளும்     வகையில் இந்தப் பாடம்
அமைக்கப் பட்டுள்ளது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

     இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

ந. பிச்சமூர்த்தி என்னும் கவிஞரைப் பற்றிய செய்திகளை
அறியலாம்.
அவரது கவிதைகள் பற்றிய செய்திகளை அறியலாம்.
அக்கவிதைகள் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய புதுமை
பற்றி அறியலாம்.
அக்கவிதைகளில் பாடப்பெறும் பொருள்கள் பற்றித்
தெரிந்து கொள்ளலாம்.
அக்கவிதைகளில் அமைந்துள்ள படைப்புத் திறன்கள்
பற்றிப் புரிந்து கொள்ளலாம்.

பிச்சமூர்த்தியின் வாழ்வியல் பார்வை பற்றி உணர்ந்து
கொள்ளலாம்.