3) அற்புதத்திருவந்தாதியிலிருந்து உவமை நயத்துக்கு ஓர்
எடுத்துக் காட்டுத் தருக.
    இயற்கையை உடலாகக் கொண்டவன் சிவன். ஒரு
நாளின் பொழுதுகளையே உவமையாக்கி, சிவபெருமானை
வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்.

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவர்க்கு
வீங்கிருளே போலும் மிடறு
- (65)

    வேளைக்கு வேளை இயற்கை அடையும் நிறங்கள்
சிவபெருமான் திருமேனியில் திகழ்தலைச் சுட்டிக் காட்டுகிறார்.