4) பாரதிதாசனின் கவிதைத் திறன் பற்றிக் கூறுக.
    “ தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ” என்று பாடிய
பாரதிதாசனின் கவிதைகளில் காணப்படும் புதிய சிந்தனைகள்
படிப்பவரைச் சிந்திக்க வைப்பவை. புரட்சிக் கவிஞரல்லவா?
உள்ளத்தில் பொங்கியெழும் தமிழ்ப்பற்று சீரிய கவிதை
படைக்கக் காரணமாயிற்று எனலாம். அதிலும் பலவிதமான
சந்தங்களைக்    கையாண்டு    சிந்துக்குத்    தந்தையாக
விளங்குவதைப் பாவேந்தரின் பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.