| |
இந்தப் பாடம், சங்க இலக்கியத்தின் புறத்திணைப்
பாடல்களில் சிறந்த இலக்கிய வகையான ஆற்றுப்படை பற்றி
விளக்குகிறது.
புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் ஆற்றுப்படைப்
பாடல்கள் இருப்பதைக் காட்டுகிறது.
அளவில் பெரிய பாடல்களால் ஆன தனித்தனி
நூல்களாகவே விளங்கும் பத்துப்பாட்டில் ஐந்து பாட்டுகள்
ஆற்றுப்படையாக அமைந்து இருப்பதைக் கூறுகிறது.
சங்க காலத்துக் கலைஞர்களின் பண்பாட்டையும்
வாழ்வையும், அவர்களை ஆதரித்துக் கலை வளர்த்த
புரவலர்களின் ஈர உள்ளத்தையும், வீர நெஞ்சத்தையும்
்ஆற்றுப்படைப் பாடல்களில் இருந்து எடுத்துக் காட்டுகிறது.
இவற்றைப் பாடிய புலவர்களின் இலக்கியப் படைப்பாற்றலைச்
சான்றுகளுடன் விளக்குகிறது.
அந்தக் காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைகளைச்
சுட்டிக் காட்டுகிறது. உலகின் வேறெந்த மொழியிலும் இந்த
வகையான பண்பாட்டு இலக்கியம் இல்லை என்பதை
உணர்த்துகிறது.
|