P10442 குறிஞ்சித் திணைப் பாடல்கள் - அறிமுகம் E
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


இந்தப் பாடம் சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள
குறிஞ்சித் திணைப் பாடல்களின் அறிமுகம் பற்றியது.
குறிஞ்சித் திணைப் பாடல்களின் முதற்பொருள்,
கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பாடம்
விவரிக்கிறது. குறிஞ்சி நில மக்களுக்கு உரிய வாழ்க்கை
ஒழுக்கங்கள், பண்புகள் ஆகிய சிறப்புகளை இப்பாடம்
விளக்குகிறது. குறிஞ்சித் திணைப் பாடல்களின் கற்பனை நயம்,
சொல்லாட்சி, உவமை முதலியவற்றையும் இப்பாடம்
விளக்குகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

குறிஞ்சித் திணைக்கு உரிய முப்பொருள்களையும் அறியலாம்.

குறிஞ்சித் திணையில் முப்பொருள் வெளிப்பாடு எவ்வாறு
அமைந்து உள்ளது என்பதைச் சில சான்றுகள் மூலம்
உணரலாம்.

குறிஞ்சித் திணைக்குரிய     காதல்     ஒழுக்கங்களான
அறத்தொடு நிற்றல், வரைவு கடாஅதல், இற்செறிப்பு,
இரவுக்குறி      ஆகியவற்றையும்;    குறிகேட்டல்,
தினைப்புனம் காத்தல் ஆகியவற்றையும் அறியலாம்.
குறிஞ்சி நிலத்துக்கு உரிய குறிஞ்சி மலர் பற்றி அறியலாம்.

குறிஞ்சிப் பாடல்களின் இலக்கியச் சுவையாகக் கற்பனை,
சொல்லாட்சி, உவமை நயங்கள் பற்றி அறியலாம்.