நார்வே நாட்டு நாடக ஆசிரியருள்
ஒருவரைக்
குறிப்பிடுக?
தமிழில் வந்துள்ள அவர் நாடகங்களைக்
குறிப்பிடுக.
நார்வே நாட்டு இப்சனின் நாடகங்கள், தமிழில் பல
வடிவங்களில் நூலாக்கப்பட்டுள்ளன. தி
பில்லர்ஸ் ஆப்
சொசைட்டி (The Pillars of Society). ஆன் எனிமி ஆப்
த பீப்பிள் (An Enemy of the people) என்ற நாடகங்கள்
இரண்டையும் சமூகத்தின் தூண்கள், மக்களின் பகைவன்
என்ற பெயர்களில் கா.திரவியம் மொழிபெயர்த்துள்ளார்.
கோபுரத்தின் உச்சியிலே, தோல்வியின்
சந்நிதானத்திலே என்ற இரு நாடகங்களையும்
கா.திரவியம்
மொழிபெயர்த்துள்ளார். பேய்கள் (Ghosts) , காட்டு வாத்து
(The Wild Duck) என்னும் நாடகங்களை துரை.அரங்கசாமி
என்பவர் மொழிபெயர்த்துள்ளார். பொம்மையா?
மனைவியா? (The Doll’s house) என்னும் நாடகத்தை,
க.நா.சுப்பிரமணியன் தமிழாக்கம் செய்துள்ளார்.
அறிஞர் அண்ணாவின் நாடகங்களில் சில, இப்சனின்
நாடகங்கள் சிலவற்றைத் தழுவியனவாக அமைந்துள்ளன.
|