p20231 பழந்தமிழ் நாட்டில் சமண சமயம்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது? E
  • சமண சமயம் பற்றிய அறிமுகச் செய்திகளைக் கூறுகிறது.
  • சமண சமயம் தமிழ்நாட்டிற்கு வந்த வரலாற்றைச்
    சுட்டுகிறது.
  • சமண சமயம் தமிழ்நாட்டில் சிறப்புடன் விளங்கியமையை
    விவரிக்கிறது.
  • சமண சமயம் தமிழ்நாட்டில் வீழ்ச்சியுற்றமைக்கான
    காரணங்களை விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • சமண சமயம் பற்றிய செய்திகளை அறிமுக அளவில்
    அறிந்து கொள்ளலாம்.
  • சமண சமயத்தின் வேறு பெயர்கள், அப்பெயர்களுக்கான
    காரணங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
  • தீர்த்தங்கரர்களின் பெயர்களை வரிசை முறைப்படி
    அறிந்து கொள்ளலாம்.
  • 23ஆவது தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் பணிகளை
    உணர்ந்து கொள்ளலாம்.
  • 24ஆவது தீர்த்தங்கரர் மகாவீரரின் சமயப் பணிகளை
    விளங்கிக் கொள்ளலாம்.
  • தமிழ்நாட்டில் சமண சமயம் நுழைந்த வரலாறு -
    சிறப்புடன் விளங்கியமை - வீழ்ச்சியுற்றமை - இவற்றைக்
    காரண காரியங்களுடன் தெரிந்து கொள்ளலாம்.


பாட அமைப்பு