| இந்தப்
பாடம் என்ன சொல்கிறது? |
 |
E |
| தமிழ் மொழியின் வளர்ச்சியில் சமணர்களின் பங்கு
பற்றிக் கூறுகிறது. சமணர்கள் தமிழுக்குச் செய்த
தொண்டுகளைப் பொது நிலையிலும், தமிழ் இலக்கியங்களில்
சமணர்கள் பற்றிய கருத்துகள் இடம் பெற்றுள்ளமையைச்
சிறப்பு நிலையிலும் சான்றுகளுடன் விவரிக்கிறது.
|
|
| இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
- தமிழ் மொழியை வளர்ப்பதில் சமயங்களின் பங்களிப்பு
மகத்தானதாகும். அவ்வகையில் சமண சமயம் தமிழுக்குச்
செய்த அருந்தொண்டுகளை விளங்கிக் கொள்ளலாம்.
- சமணர்கள் உருவாக்கிய சங்கம் பற்றித் தெரிந்து
கொள்ளலாம்.
- சமணர்கள் இயற்றிய இலக்கண நூல்கள், காப்பிய
நூல்கள், கீழ்க்கணக்கு நூல்கள், கேசி நூல்கள்,
புராணங்கள் எவை என்பதைப் பற்றிய புரிதல் ஏற்படும்.
- தமிழ் இலக்கண, இலக்கியங்களில் சமணர்கள் பற்றிய
குறிப்புகளை உணர்ந்து கொள்ளலாம்.
- சமணர்கள் தமிழுக்குச் செய்த முன்னோடிப் பணிகள்-
அவற்றின் சிறப்புகள் பற்றி அறியலாம்.
|
|
|