|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் மனித வாழ்க்கை
சக்கரம் போலச் சுழன்று வருகிறது என்பதையும் உலக
உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் சிக்கித்
தவிக்கின்றன என்பதையும் உணரலாம்.
பிறவித் துன்பத்திற்கான காரணங்கள் பற்றி அறிந்து
கொள்ளலாம். பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு
உரிய வழி முறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
பௌத்த மதத்தின் தத்துவக் கருத்துகளைப் புரிந்து
கொண்டு, இயன்றவரை நம் வாழ்வில் அவற்றைப் பின்பற்றி
வாழ முயற்சி செய்யலாம். |