P20315 - மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் - ஒப்புமை
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

     மரபுக்கவிதை, புதுக்கவிதைகளின் பெயர்க்காரணத்தை
விளக்குகின்றது. இருவகைக் கவிதைகளின் வளர்ச்சி
குறித்து எடுத்துரைக்கின்றது.

     இருவகைக் கவிதைகளின் தனித்தன்மைகள் குறித்து
விவரிக்கின்றது. இருவகைக் கவிதைகளிலும் இடம்பெறும்
அணிவகைகளைக் குறிப்பிடுகின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
  • மரபுக் கவிதை, புதுக்கவிதைகளின் இன்றைய நிலை
    குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

  • இருவகைக் கவிதைகளிலும் இடம்பெறும் சொற்கள் குறித்து
    அறிந்து கொள்ளலாம்.

  • இருவகைக் கவிதைகளிலும் இடம்பெறும் உரையாடல்
    பாங்கினைக் குறித்து அறிந்துணரலாம்.

  • பல்வேறு உத்திகள் கொண்டு இருவகைக் கவிதைகளையும்
    படைக்கும் திறன் பெறலாம்.