|
தலைவன் தலைவியருக்கிடையிலான அன்பும் சந்திப்பும்
குறித்துப் ‘பெயர்சுட்டப் பெறாமல்’ எடுத்துரைப்பது
அகப்பொருளாகும்.
தொல்காப்பியப்
பொருளதிகாரத்தில் அகத்திணையியல்,
களவியல், கற்பியல், பொருளியல் என நான்கு இயல்களில்
அகப்பாடல் இயற்றுதலுக்கான துறை, கூற்று போன்றன
எடுத்துரைக்கப் பெறுகின்றன.
குறிஞ்சித் திணை
முல்லைத் திணை
மருதத் திணை
நெய்தல் திணை
பாலைத் திணை |
- புணர்தல்
- இருத்தல்
- ஊடுதல்
- இரங்கல்
- பிரிதல் |
+புணர்தல் நிமித்தம்
+இருத்தல் நிமித்தம்
+ஊடுதல் நிமித்தம்
+இரங்கல் நிமித்தம்
+பிரிதல் நிமித்தம் |
எனத் திணைகளுக்குப் பொருண்மை வகுக்கப்பட்டன.
இவை
உரிப்பொருள் எனப்படும். இவற்றிற்குரிய நிலமும்
பொழுதும்
முதற்பொருள் எனப்படும். இவை
சார்ந்த தெய்வம்,
மக்கள்,
ஊர், நீர், பூ, மரம், பறவை, விலங்கு, யாழ், பண், தொழில்
போன்றன கருப்பொருள்
எனப்படும். அவ்வவற்றிற்குரிய
முப்பொருள்களும் அமையுமாறு
பாடுதலே முறையாகும்.
குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு,
கலித்தொகை
என எட்டுத்தொகை நூல்களுள் ஐந்து நூல்கள்
அகப்பொருளன. பத்துப்பாட்டுள்
குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்
பாட்டு, பட்டினப்பாலை ஆகிய மூன்றும் அகப்பாடல்கள்
ஆகும்.
பதினெண் கீழ்க்கணக்குள் ஐந்திணை ஐம்பது, ஐந்திணை
எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது,
கைந்நிலை, கார் நாற்பது என்னும் ஆறும் அகம் பற்றியவாகும்.
காதல், திருமணம், இல்லறம் என்பனவாக இவற்றின்
போக்கு அமையும். இவற்றில் தோழியின் பங்கு அதிகமாக
அமையும். காதலித்த தலைவனையே மணக்க வேண்டும் என்னும்
தமிழ்ப் பண்டிபாட்டிற்கேற்பத் தலைவி, தோழி, செவிலி, நற்றாய்,
தந்தை என ஒருவர் ஒருவர்க்கு முறையே காதல் நிகழ்வு
முறைப்படி எடுத்துரைக்கப்
பெறும். இஃது அறத்தொடு
நிற்றல் எனப்படும். அம்முயற்சி
தோல்வியுறுமாயின், தலைவி
தான் விரும்பிய தலைவனுடன்
அயலூருக்குப் பயணம்
மேற்கொண்டு பிறகு மணம் கொள்வாள்.
இவ்வகையான நிகழ்வு
உடன்போக்கு எனப்படும்.
களவுக் காலத்தும், கற்புக் காலத்தும் தலைவனின்
பிரிவைத்
தாங்காமல் தலைவி வருந்துதல், தோழி தேற்றுதல், அருகில்
உள்ள ஊரவர் அலர்தூற்றுதுல் ஆகியனவும் அகப்பொருளில்
இன்றியமையா இடம்பெறும்.
புலவர்கள் தம்மைப் புரக்கும் அரசர்தம் பெருமைகளை
உவமையாக அமைத்து அகப்பொருளைப் பாடுவது உண்டு.
கபிலர் குறிஞ்சித் திணையைச் சுவைபடப் பாடுவதில்
வல்லவராக
இருந்துள்ளார். ஏனையோருள் ஒரு திணையைப்
பாடியோரும் உளர் ;
பல திணைகளைப் பாடியோரும் உளர்.
நாணமிழந்து காதலைப் புலப்படுத்தும் நிலையினவாகிய
கைக்கிளை,
பெருந்திணைப் பகுதிகளும் கலித்தொகையுள்
இடம்பெற்றுள்ளன.
1. காதலின்
அளவு
நிலத்தினும்
பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும்
ஆரள வின்றே, சாரல்
கருங்கோல்
குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன்
இழைக்கும் நாடனொடு நட்பே
(குறுந்தொகை-3)
என காதலின் அளவு நிலத்தின் அகலத்திற்கும், வானின்
உயரத்திற்கும், கடலின்
ஆழத்திற்குமாகக் கூறப்படுள்ளது.
2. தலைவியின் அன்பு
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீஆகி யர்எம் கணவனை
யான்ஆ கியர்நின் நெஞ்சுநேர் பவளே
(குறுந்தொகை-49)
எனப் பரத்தமை மேற்கொண்ட தலைவனிடத்தும்,
மறுபிறப்பிலாவது நின் நெஞ்சம் நிறைபவளாகத் தான்
ஆகவேண்டும் என வேண்டுகின்றாள் தலைவி.
3. பிறந்த வீடும் புகுந்த வீடும்
அன்னாய்
வாழிவேண் டன்னைநம் படப்பை
தேன்மயங்கு
பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக்
கூவல் கீழ
மான்உண்டு
எஞ்சிய கலுழி நீரே
(ஐங்குறுநூறு-203)
(படப்பை = தோட்டம்
; உவலை = சருகு
; கூவல் = நீர்க்குழி
; கலுழி = கலங்கல்)
4. ஆண்மான் அன்பு
சுனைவாய்ச்
சிறுநீரை எய்தாதென்று எண்ணிப்
பிணைமான்
இனிதுண்ண வேண்டிக் கலைமாத்தன்
கள்ளத்தின்
ஊச்சும் சுரம்என்பர் காதலர்
உள்ளம்
படர்ந்த நெறி
(ஐந்திணை ஐம்பது, 38)
(சிறுநீரை
= சிறிதளவாகிய நீரை
; கலைமா = ஆண்மான் ;
கள்ளம் = பொய்
; ஊச்சும் = உறிஞ்சும்
; சுரம் = பாலை நில
வழி) |