6.0 பாட முன்னுரை

    பிரதாப முதலியார் சரித்திரம் எனும் நாவல் முதல்
இன்றைய சோளகர் தொட்டி எனும் நாவல் வரை தமிழ்
நாவல் இலக்கியம் பல்வேறு படிகளைத் தாண்டி வந்துள்ளது.
பொழுது போக்கத்     தோற்பொம்மை ஆட்டங்களும்,


பொம்மலாட்டங்களும்,     தெருக்கூத்து     நாடகங்களுமே
கலைகளாக இருந்தன. இக்கலைகள் ஊரின் பொது இடத்தில்
மக்களைக் கூட்டி நிகழ்த்தும் கலைகளாக இருந்தன. மழைக்
காலங்களிலும், பனிக்காலங்களிலும் மக்கள் பொது இடத்தில்
கூட முடியாத சூழலில் வீட்டில் இருக்க வேண்டிய சூழல்
வந்த நேரத்தில் பொழுது போக்க இராமாயணம்,
மகாபாரதம் போன்ற கதைகளைப் பண்டிதர்கள் படித்தனர்.
செல்வந்தர்     வீடுகளில்     இந்நிகழ்வுகள் நிகழ்ந்தன.
பிற மக்கள் இல்லங்களில் அல்லி அரசாணிமாலை, ஆரவல்லி
சூரவல்லி கதை போன்ற இலக்கியங்கள் எழுதப் படிக்கத்
தெரிந்தோரால் பிறருக்குப் படித்துக் காட்டப்பட்டன. அச்சு
இயந்திர அறிமுகம் உரைநடை வளர்ச்சி ஆகியவற்றால்
தோன்றிய நாவல் இலக்கியம் பாமரர்களும் படித்து மகிழும்
நிலையில் அமைந்தது.