இந்தப் பாடம் இதழியல் செய்தி பற்றியது. செய்தி எவ்வாறு கருவாகி உருவாகி மலர்கிறது என்கிற வரையறையைக் கூறுகிறது. மேலும் செய்தியின் முக்கிய வகைகள் பற்றியும் பேசுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகள் வாயிலாகச் சக்தி வாய்ந்த இதழியலின் அவசியத்தை அறிந்து பயன் பெறுவீர்கள்.
•
ஆக்கல், அழித்தல் தன்மை கொண்ட செய்தி என்பதன் வரையறை, விளக்கம் ஆகியவற்றை அறியலாம்.
•
பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வாயிலாகச் செய்தித் தாளின் ஆற்றல், சிறப்புக்கள் பற்றிக் கூறியுள்ள செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம்.
•
செய்தியின் இயல்புகள் இன்னின்ன என்பதைத் தெளிவாக அறியலாம்.
•
செய்தியின் முக்கிய வகைகளைப் பற்றி விளக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.