1) |
செய்திகளை எழுதும் பொழுது எளிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும். தெளிவற்ற கருத்துகளைக் கூறக் கூடாது. |
2) |
சிக்கலான பொருள்களை வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுத வேண்டும். |
3) |
தேவைக்கு அதிகமாகச் சொற்களையோ, தொடர்களையோ பயன்படுத்தக் கூடாது. |
4) |
தொடர்புடைய சொற்களையே பயன்படுத்த வேண்டும். நிகழ் காலத்திலோ இறந்த காலத்திலோ செய்திகளை எழுதிக்கொண்டு இருந்தால், அந்தக் காலங்களை மாற்றி எழுதிவிடாமல் கவனமாக எழுத வேண்டும். |
5) |
எதிர்மறையில் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். |
6) |
பெரும்பாலும் செய்வினை வாக்கியங்களாகவே அமைக்க வேண்டும். |
7) |
அனைவருக்கும் தெரிந்த சொல் சுருக்கங்களையே பயன்படுத்த வேண்டும். உதாரணம் : ஐ.நா.சபை ; ஈ.வெ.ரா போன்றவை. |
8) |
எழுத்துப் பிழைகள், வாக்கியப் பிழைகள்,
இல்லாமல்
எழுத வேண்டும். |
9) |
எழுதுபவரின் சொந்தக் கருத்தோ, அவரது சுய உணர்ச்சிகேளா, எழுதும் செய்தியில் இடம் பெற்றுவிடக் கூடாது. |
10) |
செய்திகளைச் சிறு சிறு பத்திகளாக அமைப்பது சாலச் சிறந்தது. |
11) |
துணைத்தலைப்புகள் கொடுத்து எழுதுவது சிறந்தது. |