முதல் பருவம்

நிலை - 1

2.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 2

உணவுத் திருவிழா

உணவுத் திருவிழா

அப்பா : உணவுத் திருவிழா நடக்கிறதே, போலாமா?
அம்மா : அப்படியா? எங்கே நடக்குது?
அப்பா : கடற்கரைக்குப் பக்கத்தில இருக்கிற விளையாட்டுத் திடல்ல நடக்குது.
வேந்தன் : அப்பா, நா விளையாடப்போறேன், அதனால வரலேப்பா.
முல்லை : நானுந்தான் விளையாடப்போறேன்,
அம்மா : அடடா, பிள்ளைகளா நல்லாக் கேட்டுக்குங்க.
அங்கே வந்தீங்கனா பலவகையான உணவுகளைப் பாக்கலாம்.
வேந்தன் : அப்படி என்ன உணவு இருக்கும்?
அம்மா : ஆப்பம், இடியாப்பம், பிட்டு, கொழுக்கட்டை, அடை, தோசை, பொங்கல், வடை, முறுக்கு………இன்னும் எத்தனையோ இருக்கு.
முல்லை : ஓ! இத்தனை உணவுகளா? எல்லா உணவையும் பார்க்கணும்போல இருக்கே?
அம்மா : பார்க்க மட்டுமா? உங்களுக்குப் பிடித்த உணவுகளை வாங்கியும் சாப்பிடலாம்.
வேந்தன் : ஓ! நாங்க இப்பவே வர்றோம்பா.
அப்பா : மிக்க மகிழ்ச்சி. வாங்க, எல்லாரும் போலாம்.