முதல் பருவம்

நிலை - 1

9.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 9

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

கவி : மாமா, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் இருக்கு. என்ன நடக்குது?
மாமா : அதுவா, கவி! நம்ம ஊர்ல நாட்டுப்புறக் கலை விழா நடக்குது.
கவி : ஓ அப்படியா ! வாங்க மாமா பாப்போம்.
மாமா : ம்ம்…. போகலாமே!.
கவி : அதோ பாருங்க, மாமா. கையில துணி வச்சு ஆடுறாங்களே அது என்ன ஆட்டம்?
மாமா : அதுதான் கவி ஒயிலாட்டம்.
கவி : ஓ… அழகா இருக்குல்ல. சரி, மாமா. அங்கே பாருங்க. மயில் போல வேஷம் போட்டு ஆடுறாங்க.
மாமா : அது மயிலாட்டம், கவி.
கவி : ரொம்ப அழகாக இருக்குல்ல.
மாமா : ஆமா. அதோ அங்க பாரு! அந்தப் பறை இசைக்கு எவ்ளோ ஆர்வமா ஆடுறாங்க.
கவி : அத கேட்கும்போது எனக்கும் ஆடத் தோணுது, மாமா.
மாமா : ஆமாம் கவி! எனக்கும் அப்படியேதான் இருக்கு!