| கவி : | மாமா, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் இருக்கு. என்ன நடக்குது? |
| மாமா : | அதுவா, கவி! நம்ம ஊர்ல நாட்டுப்புறக் கலை விழா நடக்குது. |
| கவி : | ஓ அப்படியா ! வாங்க மாமா பாப்போம். |
| மாமா : | ம்ம்…. போகலாமே!. |
| கவி : | அதோ பாருங்க, மாமா. கையில துணி வச்சு ஆடுறாங்களே அது என்ன ஆட்டம்? |
| மாமா : | அதுதான் கவி ஒயிலாட்டம். |
| கவி : | ஓ… அழகா இருக்குல்ல. சரி, மாமா. அங்கே பாருங்க. மயில் போல வேஷம் போட்டு ஆடுறாங்க. |
| மாமா : | அது மயிலாட்டம், கவி. |
| கவி : | ரொம்ப அழகாக இருக்குல்ல. |
| மாமா : | ஆமா. அதோ அங்க பாரு! அந்தப் பறை இசைக்கு எவ்ளோ ஆர்வமா ஆடுறாங்க. |
| கவி : | அத கேட்கும்போது எனக்கும் ஆடத் தோணுது, மாமா. |
| மாமா : | ஆமாம் கவி! எனக்கும் அப்படியேதான் இருக்கு! |