இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 18
18.8 செந்தமிழ்ச்செல்வம்

பழமொழி நானூறு

பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்

சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் – நல்லாய்!

மணலுள் மூழ்கி மறைந்து கிடக்கும்

நுணலும்தன் வாயால் கெடும்

(பாடல் – 184)

- முன்னுறை அரையனார்

(பேதை – அறிவில்லாதவர்; நுணல் – தவளை)

பொருள் :

அழகிய பெண்ணே! நான் கூறுவதைக் கேள். மணலில் மறைந்து வாழும் தவளை, தான் எழுப்பும் ஒலியால் தன் மறைவிடத்தை எதிரிக்குக்காட்டி, அழிந்துவிடும். அதுபோல, அறிவில்லாதவர்கள் தம் வாயாலேயே தீங்கு தரும் சொற்களைப் பேசித் தமக்குத் தாமே துன்பத்தைத் தேடிக் கொள்வர்.