இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21
21.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

(குறள் – 423)

- திருக்குறள்

(மெய்ப்பொருள் – உண்மைப் பொருள்; காண்பது – அறிந்துகொள்வது)

பொருள் :

எப்பொருளை யார் கூறக் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அதன் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும்.