இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
29.8 செந்தமிழ்ச்செல்வம்

ஆசாரக்கோவை

கைப்பன எல்லாம் கடை, தலை தித்திப்ப,
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க, முறை வகையால் ஊண்

(பாடல் – 25)

- பெருவாயின்முள்ளியார்

(கைப்பன – கசப்பன; மெச்சும் – புகழும்; துய்க்க – அனுபவிக்க)

பொருள் :

இனிப்பான உணவுகளை முதலில் உண்ண வேண்டும். இறுதியில் கசப்பான உணவுகளை உண்ணவேண்டும். வேறு சுவைப் பொருள்களை இடையே உண்ணல் வேண்டும்.