17.10 படைப்பாற்றல் வளர்ப்போம்
கீழ்க்காணும் சொற்களைப் பயன்படுத்தி, இயற்கையை வருணித்துத் தொடர்கள் எழுதுக.
அழகான – பசுமையான – உயரமான – நீளமான – அடர்ந்த
காடுகள் – பூக்கள் – ஆறு – மலை – புல்வெளி
17.11 உயர்நிலைத் திறன்
ஒரு கதையின் நிகழ்வுகள் இடம் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வரிசைப்படுத்தி எழுதுக.
- போட்டி நடைபெறுவதற்குப் பதினைந்து நாள் இருந்தது.
- போட்டியில் தமிழ்மணி வெற்றி பெறக்கூடாது எனப் பொன்னன் நினைத்தான்.
- பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி அறிவிக்கப்பட்டது.
- போட்டி நடைபெறுவதற்கு ஒருவாரத்திற்குமுன்பு, தமிழ்மணியின் திருக்குறள் புத்தகத்தை எடுத்து மறைத்துவைத்தான்.
- எந்தச் செயலையும் காலம் கருதிச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதைப் பொன்னன் உணர்ந்துகொண்டான்.
- தமிழ்மணியும் தன் பெயரைப் பதிவுசெய்தான்.
- தமிழ்மணி நேரத்தை வீணாக்காமல், முதல் வாரத்திலேயே போட்டிக்குத் தேவையான குறள்களை நன்கு படித்துவிட்டான்.
- மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ள முன்வந்தனர்.
- முதற்பரிசு தமிழ்மணிக்கே கிடைத்தது. பொன்னனுக்கு மூன்றாமிடம் கிடைத்தது.
- தமிழ்மணி எப்படி வெற்றி பெற்றான் எனப் பொன்னன் யோசித்தான்.
17.12 செயல்திட்டம்
கீழடி ஆய்வில் கிடைத்த பொருள்களுள் சிலவற்றின் மாதிரிகளைச் செய்துவருக.