உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 18
18.3 தெரிந்துகொள்வோம்

மரபுத்தொடர்கள்

மீனா : ஆதிரா! நீ ஏன் கலைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்காமல் ஆறப்போடுகிறாய்?
ஆதிரா : மருத்துவம் பயிலக் காத்திருக்கிறேன். அதில் சேர்ந்தால் வெளுத்து வாங்குவேன்.
மீனா : நீ விண்ணப்பிக்காமல் பூசி மெழுகியதற்கு இப்போது தான் காரணம் புரிகிறது. வாழ்த்துகள் ஆதிரா.