உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 20
20.7 செந்தமிழ்ச்செல்வம்

நாலடியார்

அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகுஉவப்பச் செய்து – பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.

- (பாடல் 139)

சமண முனிவர்கள்

(அஞ்சுவது – அச்சப்படுவது; உவப்ப – மகிழ; எஞ்ஞான்றும் – எப்போதும்)

பொருள்

அறியவேண்டிய நன்மை, தீமைகளை அறிந்து, அடக்கமுடையவராகத் திகழவேண்டும். அச்சம் கொள்ளவேண்டிய பழிச்செயல்களுக்கு அச்சப்பட வேண்டும். செய்யவேண்டிய செயல்களை உலகம் மகிழுமாறு செய்ய வேண்டும். அறநெறியில் வந்த பொருளால் மகிழ்ந்து வாழும் இயல்பும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இப்படிபட்டவர்கள் எப்போதும் துன்புற்று வாழ்வதில்லை.

பழமொழி

நேர்மையே சிறந்த கொள்கை

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுழலும்.
  2. சிறந்த விண்வெளிப் பயணம்.
  3. வான்வெளியில் பறக்க ஆசை.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. விண்கலம்
  2. விண்வெளி
  3. பாராட்டு
  4. பதக்கம்
  5. மாணவர்கள்