உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
29.3 தெரிந்து கொள்வோம்

புணர்ச்சி

இருசொல் இணைவது புணர்ச்சி

(எ.கா.)

1. தமிழ் + மொழி = தமிழ்மொழி
2. ஆணி + வேர் = ஆணிவேர்
3. வாழை + மரம் = வாழைமரம்

விகாரப் புணர்ச்சி
இரு சொல் இணையும்போது மாற்றம் உண்டு

தோன்றல்
இடையில் ஓர் எழுத்து தோன்றும்

(எ,கா.)

1. திரு + குறள் = திருக்குறள்
2. தமிழ் + பாடம் = தமிழ்ப்பாடம்
3. மலை + தேன் = மலைத்தேன்
4. பட்டு + சட்டை = பட்டுச்சட்டை

திரிதல்
ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாக மாறும்

(எ.கா.)

1. பல் + பசை = பற்பசை
2. மண் + குடம் = மட்குடம்
3. அருள் + செல்வம் = அருட்செல்வம்
4. பொன் + சிலம்பு = பொற்சிலம்பு

கெடுதல்
ஓர் எழுத்து கெடும் (மறையும்)

(எ.கா.)

1. மரம் + வேர் = மரவேர்
2. வட்டம் + வளையல் = வட்டவளையல்
3. பாடம் + நூல் = பாடநூல்
4. தங்கம் + மோதிரம் = தங்கமோதிரம்