உகரம்
(இரண்டாம் பருவம்)
அன்பு வேண்டுமா? – தம்பீ
அழகு வேண்டுமா?
அன்பைப் பெற்றால் அழகுவரும்
அன்பு வேண்டுமே! அகத்தில்
அன்பு வேண்டுமே!
ஊக்கம் வேண்டுமா? – தம்பீ!
உடைமை வேண்டுமா?
ஊக்கம் பெற்றால் உடைமை வரும்
ஊக்கம் வேண்டுமே! – அகத்தில்
ஊக்கம் வேண்டுமே!
கல்வி வேண்டுமா? – தம்பீ!
செல்வம் வேண்டுமா?
கல்வி பெற்றால் செல்வம் வரும்
கல்வி வேண்டுமே, மனத்தில்
கல்வி வேண்டுமே!
உண்மை வேண்டுமா? – தம்பீ
திண்மை வேண்டுமா?
உண்மை பெற்றால் திண்மை வரும்
உண்மை வேண்டுமே! எனக்கு
உண்மை வேண்டுமே!
அன்பும் ஊக்கமும் கல்வியும்
உண்மையும் இருந்தால்
பின்பு தோன்றும் யாவையும்
நல்லவே தோன்றும்.
- தமிழறிஞர் அடிகளாசிரியர்
(அகம் – உள்ளம்; உடைமை – பொருள்: திண்மை – வலிமை)
அன்பைப் பெற்றால் அழகு வரும்.
ஊக்கம் வந்தால் உடைமை வரும்.
செல்வம் கிடைக்க கல்வியைப் பெற வேண்டும்.
வலிமை கிடைக்க உண்மை பெற வேண்டும்.
நல்லவை அனைத்தும் கிடைக்க அன்பும், ஊக்கமும், கல்வியும், உண்மையும் இருக்க வேண்டும்.