உகரம்
(இரண்டாம் பருவம்)

சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்ட வளாகத்தில் காலை 9.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.
கண்காட்சி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
கண்காட்சி தமிழகப் பண்பாட்டைப் பற்றியது.
கண்காட்சியில் பரத நாட்டியம், பேச்சுப்போட்டி, நாட்டுப்புறப் பாடல்கள், பறை இசை, பொய்க்கால் குதிரை போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
மாணவர்கள், இளைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் பங்குபெறலாம்.