ழகரம்
(முதல் பருவம்)
- (பாடல் – 8)
- சிவப்பிரகாசர்
(உள்ளம் – மனம் ; குணம் – பண்பு ; தடங்கரை – பெரிய கரை ; விளம்பு – கூறு)
பொங்கிவரும் வெள்ளத்தைக் கரை கட்டித் தடுத்தல் அரிதா அல்லது கரையை உடைத்து வெள்ளத்தை விடுவது அரிதா? உள்ளத்திலிருந்து சீறி எழுகின்ற சினத்தைக் காத்துக்கொள்வதுதான் அரிது. ஆதலால், அத்தகைய சினத்தைக் காத்துக்கொள்வதே சிறந்த பண்பாகும்.
மனம்போல வாழ்வு.
பண்பாடு என்பதற்குப் பண்படுத்துதல் என்று பொருள். பண்பட்ட மனம் நல்ல மனிதர்களுக்கு அடையளாம். மனம் பண்படும்போது நற்பண்புகள் உருவாகும். ஒருவருடைய மேன்மைக்கு அவருடைய நற்பண்புகளே காரணமாக அமைகின்றன.