ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.3 தெரிந்து கொள்வோம்

தன்வினை – பிறவினை

எழுவாய் (Noun) ஒரு செயலைத் தானே செய்தால் அது தன்வினை.
எழுவாய் ஒரு செயலைச் செய்ய வைத்தால் அது பிறவினை.

தன்வினை பிறவினை

கார்த்திகா ஓவியம்
வரையக் கற்றாள்.

கார்த்திகா, தன் தோழிக்கு
ஓவியம் வரையக் கற்பித்தாள்.

அரசர், அமைச்சரின் அறிவுரையைக்
கேட்டுத் திருந்தினார்.

அமைச்சர் அறிவுரை கூறி,
அரசரைத் திருத்தினார்.

அம்மா சோறு உண்டாள்.

அம்மா குழந்தைக்குச் சோறு
உண்பித்தாள்.

வேலன், நகைச்சுவைக்
கதையைப் படித்து மகிழ்ந்தான்.

வேலன், நகைச்சுவைக்
கதையை நண்பனுக்குக் கூறி,
அவனை மகிழ்வித்தான்.