ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 18
18.3 தெரிந்து கொள்வோம்

தெரிநிலை வினையெச்சம்

ஒரு வினையெச்சத் தொடரில் காலத்தையும் செயலையும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

உடன்பாட்டு வினையெச்சம்


அழகன் எழுதிப் பார்த்தான்.

மான் துள்ளிக் குதித்தது.

மாலதி வரைந்து பார்த்தாள்.

மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
யானைகள் நடந்து சென்றன.

எதிர்மறை வினையெச்சம்

இனியா கொடுத்த உணவை, நாய்க்குட்டி உண்ணாமல் சென்றது.

கண்ணன் ஊதல் ஒலி கேட்டும் ஓடாது இருந்தான்.

யானையைக் கண்ட புலி அசையாது இருந்தது.

கந்தன் பாம்பைக் கண்டும் அஞ்சாது சென்றான்.