ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 26
26.7 செந்தமிழ்ச்செல்வம்

கம்பராமாயணம்

“உடலிடைத் தோன்றிற்று ஒன்றை
அறுத்துஅதன் உதிரம் ஊற்றிச்
சுடலுறச் சுட்டு வேறோர்
மருந்தினால் துயரம் தீர்ப்பர்”

- (பாடல் 7417)

- கம்பர்

பொருள்

சிகிச்சை செய்வோர், உடலில் தோன்றிய கட்டியை அறுத்து, அதிலுள்ள தூய்மையற்ற உதிரத்தை வெளியேற்றுவர். சுட வேண்டியவற்றைச் சுட்டும் உண்டாகும் புண்ணுக்கு மருந்திட்டும் துன்பத்தைத் தீர்ப்பர்.

பழமொழி

விருந்தும் மருந்தும் மூன்றே நாள்

சொல்வதைக் கேட்டு எழுதுக

விபத்து முதலான கடுமையான பாதிப்புக்கு உட்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு முதல் ஒருமணி நேரத்திற்குள் அளிக்கப்படும் சிகிச்சையால் அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியும். இந்த ஒருமணி நேரத்தைத்தான் மருத்துவத் துறை, ‘தங்கநேரம்‘ என்கிறது.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. நிறுவனம்
  2. சிகிச்சை
  3. வளர்ச்சி