ழகரம்
(இரண்டாம் பருவம்)
புணர்ச்சி இரு வகைப்படும்
நிலைமொழியின் கடைசி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் சேரும்போது எவ்வித மாற்றமும் இன்றிப் புணர்வது (சேர்வது) இயல்பு புணர்ச்சி எனப்படும்.
(எ.கா.)
|
குதிரை | + | வண்டி | = | குதிரைவண்டி | ||
|
மலர் | + | மாலை | = | மலர்மாலை | ||
|
வான் | + | மேகம் | = | வான்மேகம் |
விகாரம் என்பதற்கு மாற்றம் என்பது பொருள். இரு சொல் புணரும்போது விகாரம் தோன்றுவதால் (மாற்றம்) அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.
நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் புணரும்போது, மூன்று மாற்றங்கள் ஏற்படும்.
1. ஓர் எழுத்து புதிதாகத் தோன்றும் (தோன்றல் விகாரம்)![]() |
பூ | + | சோலை | = | பூஞ்சோலை | |
| 'ஞ்' என்னும் புதிய எழுத்து தோன்றி பூஞ்சோலை எனப் புணர்ந்துள்ளது. | ||||||
![]() |
பல் | + | பசை | = | பற்பசை | |
| 'ல்' என்னும் எழுத்து 'ற்' எனத் திரிந்து பற்பசை எனப் புணர்ந்துள்ளது. | ||||||
![]() |
மரம் | + | வேர் | = | மரவேர் | |
| 'ம்' என்னும் எழுத்து கெட்டு மரவேர் எனப் புணர்ந்துள்ளது. | ||||||