| மண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்ணுற் றடைய யகாரமு மண்ண நுனிநா வருட ரழவு மண்பன் முதலு மண்ணமு முறையினா விளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும் லளவு மேற்பல் லிதழுற வகாரமு மண்ண நுனிநா வொற்ற றனவுந் தோன்றும்.
|
| 13 | ஆய்தநெஞ் சோசையி னங்காந் தியலும்.
|
| 18 | புள்ளி யில்லா வெல்லா மெய்யு மவ்வொடு முன்னுரு வாகியு மேனை யுயிரொடு திரிந்து மேறிய வுயிரி னளவா யதனுரு வடக்கி முந்துயிர்த்த லுயிர்மெய் யென்மனா ருணர்ந்திசி னோரே.
|
| 19 | இசைகெடின் மொழிமுத லிடைகடை நெடில்வழித் தத்த மொத்த குற்றெழுத் தோடள பெழூஉ மையௌ இஉ என்னு மாயீ ரெழுத்தோ டளபெழு மென்ப.
|
| 22 | லளமெய் திரிந்த னணமுனும் வருமொழி வகார மிசையு மகாரங் குறுகும்.
|
| 24 | நெடிலிரண் டையௌக் குறுக்கங் குறிலொன் றாய்தமொற் றிய்யுக் குறுமை யரைகுறண் மஃகான் கான்மாத் திரைபெறு மதுதான் கண்ணிமை நொடியென நுண்ணியோ ருரைப்ப.
|
| 26 | பன்னீ ருயிருங் கதந பமவெனு மாவைந் தெழுத்தொடு சவஞய வுளப்பட வவ்வொன் பானுயிர் மெய்யு மொழிமுதல்.
|
| 27 | ஐஒள வலவொடு சகாரமும் உஊ ஒஓ வலவொடு வகாரமும் ஆஎ ஒவ்வொடு ஞகாரமு மாவொடு யகாரமு முதலு மென்மனார் முறையுணர்ந் தோரே. |