முகப்பு |
நெய்தல் தத்தனார் |
49. நெய்தல் |
படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த் |
||
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே; |
||
முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப் |
||
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே; |
||
5 |
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து, |
|
எமரும் அல்கினர்; 'ஏமார்ந்தனம்' எனச் |
||
சென்று நாம் அறியின், எவனோ-தோழி! |
||
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ |
||
முன்றில் தாழையொடு கமழும் |
||
10 |
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே? | உரை |
தோழி, தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது; சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம்.-நெய்தல் தத்தனார்
|
130. நெய்தல் |
வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண் |
||
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப, |
||
கோலின் எறிந்து காலைத் தோன்றிய |
||
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த் |
||
5 |
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ? |
|
எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்; |
||
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் |
||
வாடிய வரியும் நோக்கி, நீடாது, |
||
'எவன் செய்தனள், இப் பேர் அஞர் உறுவி?' என்று |
||
10 |
ஒரு நாள் கூறின்றுமிலரே; விரிநீர் |
|
வையக வரையளவு இறந்த, |
||
எவ்வ நோய்; பிறிது உயவுத் துணை இன்றே. | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது.- நெய்தல்தத்தனார்
|