முகப்பு |
பூதன் தேவனார் |
80. மருதம் |
'மன்ற எருமை மலர் தலைக் காரான் |
||
இன் தீம் பாற்பயம் கொண்மார், கன்று விட்டு, |
||
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும் |
||
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து, |
||
5 |
தழையும் தாரும் தந்தனன், இவன்' என, |
|
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ, |
||
தைஇத் திங்கள் தண் கயம் படியும் |
||
பெருந் தோட் குறுமகள் அல்லது, |
||
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே. | உரை | |
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன் நெஞ்சிற்கு உரைத்தது.-பூதன்தேவனார்
|