முகப்பு |
பெருங்கண்ணனார் |
137. பாலை |
தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல், |
||
தட மென் பணைத் தோள், மட நல்லோள்வயின் |
||
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று |
||
எய்தினை, வாழிய-நெஞ்சே!-செவ் வரை |
||
5 |
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை, |
|
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர், |
||
பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை |
||
அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல்' ஆகும் |
||
குன்ற வைப்பின் கானம் |
||
10 |
சென்று, சேண் அகறல் வல்லிய நீயே! | உரை |
தலைவன் செலவு அழுங்கியது.-பெருங்கண்ணனார்
|