முகப்பு |
மீளிப் பெரும்பதுமனார் |
109. பாலை |
'ஒன்றுதும்' என்ற தொன்று படு நட்பின் |
||
காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று, |
||
'அன்னவோ, இந் நன்னுதல் நிலை?' என, |
||
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி |
||
5 |
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென |
|
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில், |
||
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து, |
||
உச்சிக் கட்டிய கூழை ஆவின் |
||
நிலை என, ஒருவேன் ஆகி |
||
10 |
உலமர, கழியும், இப் பகல் மடி பொழுதே! | உரை |
பிரிவிடை ஆற்றாளாய தலைமளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள்சொல்லியது.-மீளிப் பெரும்பதுமனார்
|