முகப்பு |
அம்ம வாழி....காதலர் |
289. முல்லை |
அம்ம வாழி, தோழி!-காதலர், |
||
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய |
||
சொல் புடைபெயர்தலோ இலரே; வானம் |
||
நளி கடல் முகந்து, செறிதக இருளி, |
||
5 |
கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி, |
|
கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை, |
||
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய |
||
பெரு மர ஒடியல் போல, |
||
அருள் இலேன் அம்ம; அளியேன் யானே. | உரை | |
பிரிவிடைப் பருவம் கண்டு சொல்லியது.- மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
|