முகப்பு |
அருந் துயர் |
381. முல்லை |
'அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்' எனப் |
||
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்; |
||
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை |
||
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல, |
||
5 |
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை |
|
யாங்கனம் தாங்குவென் மற்றே?-ஓங்கு செலல் |
||
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி, |
||
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க, |
||
தேர் வீசு இருக்கை போல, |
||
10 |
மாரி இரீஇ மான்றன்றால் மழையே. | உரை |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் பருவ வரவின்கண் சொல்லியது.-ஒளவையார்
|