முகப்பு |
ஆடு இயல் விழவின் |
90. மருதம் |
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர், |
||
உடையோர் பன்மையின் பெருங் கை தூவா, |
||
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த |
||
புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு |
||
5 |
வாடா மாலை துயல்வர, ஓடி, |
|
பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் |
||
பூங் கண் ஆயம் ஊக்க, ஊங்காள், |
||
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி, |
||
நல்கூர் பெண்டின், சில் வளைக் குறுமகள் |
||
10 |
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா |
|
நயன் இல் மாக்களொடு கெழீஇ, |
||
பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே! | உரை | |
தோழி, தலைமகளுக்கு உரைப்பாளாய், பாணனை நெருங்கி வாயில்மறுத்தது.-அஞ்சில் அஞ்சியார்
|