இருங் கழி துழைஇய

127. நெய்தல்
இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து,
உவன் வரின், எவனோ?-பாண!-பேதை
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த
5
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும்,
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்,
'மெல்லம் புலம்பன் அன்றியும்,
செல்வாம்' என்னும், 'கானலானே'.

பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.-சீத்தலைச் சாத்தனார்